Close
மே 20, 2024 9:38 மணி

திருச்சுழி அருகே பசுமை கிராம திட்டத்தில் இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கல் 

விருதுநகர்

திருச்சுழி அருகே உடையனாம்பட்டி ஊராட்சியில் , பசுமை கிராம திட்டம் சார்பாக இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையனாம்பட்டி ஊராட்சியில், பசுமை கிராம திட்டம் சார்பாக இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் பேரில் ,
திருச்சுழி ஒன்றியம் உடையனாம்பட்டி ஊராட்சி மற்றும் காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் இணைந்து பசுமை கிராம திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

உடையனாம்பட்டிஅரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் குறுங்காடு வளர்த்தல், ஊரணி, கண்மாய் கரையில் மரம் வளர்த்தல், ஊராட்சியில் உள்ள தரிசு நிலங்களில் ஊரக வளர்ச்சி துறை,

வனத்துறை மற்றும் வேளாண்துறைகளுடன் இணைந்து மரக்கன்றுகள் நடுதல், இல்லங்கள் தோறும் தென்னங்கன்று. மற்றும் மாமரக்கன்றுகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் செயல் படுத்தப் படுகிறது.

இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார். கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் முன்னிலை வகித்தார்.சட்ட ஆலோசகர் செந்தில்குமார் பங்கேற்று, பொது மக்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

உடையனாம்பட்டி ஊராட்சியில், பசுமை கிராம திட்டத்தின் மூலமாக இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகளை முறையாக பாதுகாப்பாக வளர்க்கும் இல்லத்தரிசி களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் , உடையனாம்பட்டியை பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்றுவோம் என்று ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆசிரியர்கள் குருசாமி, ஆறுமுகம், பணித்தள பொறுப்பாளர் வினோதினி, மாலை நேர கல்வி மைய பயிற்றுநர்கள் ராமலட்சுமி, புவனா மற்றும் பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top