Close
செப்டம்பர் 28, 2024 3:06 மணி

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இதன்படி திங்கள்கிழமை மதுரை அவனியாபுரத்திலும், செவ்வாய்க் கிழமை பாலமேட்டிலும் உற்சாகமாக நடந்தது.

இதைத்தொடர்ந்து, புதன்கிழமை  நடைபெற்ற   அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை  அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

மதுரை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைத்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

காலை 7 மணிக்கு போட்டி தொடங்கியது. முன்னதாக, அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன மாலை 5 மணிவரை போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அடுத்தடுத்து சுற்றுகள் நீடித்து வந்த நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

இதில், தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை அடக்க கூடிய நபர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்.

மதுரை
அலங்காரநல்லூர்  கோயில்  காளையுடன் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

இந்த நிலையில்,  ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடத்தி முடிக்கப்பட்டு, மாலை 6.15 மணிக்கு நிறைவு பெற்றது. இதில், 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதல் இடத்தில் உள்ளார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

17 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் 2-வது இடத்தில் உள்ளார். 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடத்தில் உள்ளார். இதேபோன்று, போட்டியில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளது. அதற்கு கார் பரிசு கிடைத்துள்ளது. 2-வது இடம் பிடித்த காளை மற்றும் வீரருக்கு பைக் பரிசாக வழங்கப் பட்டது.வெற்றி பெற்றவர்கள் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பரிசுகளை பெற்றனர்.

இதில், அமைச்சர்கள் பி. மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறை அரசு கூடுதல் செயலர் மங்கத் சர்மா, ஆட்சியர் சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, தமிழரசி, வெங்கடேசன், புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த போட்டியின்போது, பார்வையாளர்கள், வீரர்கள், பாதுகாவலர் கள் உள்பட 83 பேர் காயம் அடைந்தனர். அவர்களில், 12 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
.
பாதுகாப்பு ஏற்பாடுகளை, தென் மண்டல காவல்துறைத் தலைவர் நரேந்திரன் நாயர், டிஐஜி, மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. தலைமையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top