Close
ஜூலை 2, 2024 2:01 மணி

திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்

சென்னை

திருவொற்றியூர் 12 வது வட்டத்தில் மாமன்ற கவுன்சிலரும் திமுக தலைமை கழக வழக்கறி ஞருமான வீ.கவிகணேசன் தலைமையில் நடைபெற்ற முகாம்

திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்கள்பயனடைந்தனர்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்த
இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர்
மண்டலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு வட்டமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, 12 -ஆவது வட்டத்தில் மாமன்ற கவுன்சிலரும் திமுக தலைமை கழக வழக்கறிஞருமான வீ.கவிகணேசன்
தலைமையில் நடைபெற்றது. அனைத்து அரசு துறையினர் பங்கேற்ற இந்த முகாமுக்கு வருகை தந்த முதியவர்களையும் மாற்றுத்திறனாளிகளையும் ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை காவலரிடம் கவுன்சிலர் கவிகணேசன் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.

இந்த முகாமில் மாநகராட்சி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் திமுக வட்ட செயலாளர் கே.வி.சத்திஷ் குமார் முன்னாள் கவுன்சிலர்கள் பி.எஸ்.சைலஸ் வி.வேலு மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் ம.ஜெயராமன் வழக்கறிஞர் பாஸ்கர் மோகன் பாக்கியமணி தாராபாணு சண்முகம் ஜெயசீலன் வேணுகோபால் எஸ்.விஜயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர் னர்.இந்த முகாமில் காலடிப்பேட்டை மக்கள் ஆயிரக் கணக்கானோர் பயனடைந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top