Close
ஜூலை 4, 2024 4:48 மணி

1000 மாணவர்களுக்கு லட்டுடன் சிக்கன் பிரியாணிவழங்கிய திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர்

சென்னை

மாணவர் களுக்கு லட்டுடன் சிக்கன் பிரியாணி வழங்கிய திருவொற்றியூர் எம்எல்ஏ கே பி சங்கர்

திருவொற்றியூர் அரசுபள்ளி குடியரசு தின விழாவில் 1000 மாணவர்களுக்கு லட்டுடன் சிக்கன் பிரியாணியை எம்எல்ஏ-கே பி சங்கர் வழங்கினார்.

இந்தியகுடியரசு தின விழா திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியாஅரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

இந்த பள்ளியில் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. தேசியகொடி ஏற்றி வைத்து. சிறந்த மாணவ மாணவிகளுக்கு சாதனையாளர் களுக்கு மரியாதை செய்து பாராட்டு தெரிவித்து பேசுகையில்,

நமது வாழ்க்கைக்கு கல்வி முக்கியம். மீனவ சமுதாயத்தில் பிறந்த நான் இதே பள்ளியில் படித்து எம்எல்ஏ ஆகியுள்ளேன்
எனது இரண்டு மகள்களை டாக்டராக்கி உள்ளேன்.

அதேபோல். நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து உங்களுக்கு விருப்பப்பட்ட. பாடங்களைத் தேர்வு செய்து எதிர்காலத்தில் சாதனையாளர்களாக வேண்டும் என்று  குறிப்பிட்டார்.

முடிவில் பள்ளியில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்குசிக்கன் பிரியாணி லட்டு குடிநீர் பாட்டில் வழங்கி விருந்தளித்தார்.

இந்த விழாவில் பி.டி.ஏ.நிர்வாகிகள் வி.இராமநாதன், கே.பி. சொக்கலிங்கம், அரிமா எஸ்.டி. சங்கர் உட்பட 100 -க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top