Close
மே 13, 2024 4:50 மணி

புதுக்கோட்டையில்  மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி சார்பில் மாநில  அளவிலான சதுரங்க போட்டி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற சதுரங்கப்போட்டி

புதுக்கோட்டையில்  மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி சார்பில் மாநில  அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.  புதுக்கோட்டையில்  மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி சார்பில் மாநில  அளவிலான சதுரங்க போட்டி  நாடார் மஹாலில் நடைபெற்றது.

போட்டியின்  தொடக்க விழாவிற்கு   ஆப்பிள் ஷாப்பிங் ரியாஸ் தலைமை  வகித்தார். மாவட்ட சதுரங்க கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார்.

மாஸ்டர்ஸ் செஸ் அகாடமி நிறுவனர் பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார்.   மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர்  பூங்குடி சிவா கலந்து கொண்டு    சதுரங்க போட்டியை  தொடங்கி வைத்தார்.

போட்டியில்  ஒன்பது வயதிற்கு உட்பட்டோர் 11 வயதுக்கு உட்பட்டோர் 13 வயது உட்பட்டோர்17 வயதுக்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 250 க்கும் மேற்பட்ட இளம் சதுரங்க வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்று ஆர்வமுடன் விளையாடினர்.

புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கணேசன், அடைக்கலவன், அங்கப்பன் மருத்துவர் கோபாலகிருஷ்ணன்,  பி.ரமேஷ், சபியுல்லா இக்பால், சுப்ரமணியன், பார்த்திபன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top