Close
ஜூலை 4, 2024 5:00 மணி

சென்னையில் பிப் 4 ல் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நன்றி அறிவிப்பு மாநாடு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆசிரியர் முன்னேற்ற சங்க ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், மாநில தலைவர் கு. தியாகராஜன்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்வியில் கலைஞர் என்ற கருத்தரங்கம் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெறக்கூடிய நன்றி அறிவிப்பு மாநாடு தொடர்பாக அவசர ஆயத்த கூட்டம் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக  தமிழ்நாடு ஆசிரியர் கலந்து கொண்டு பேசுகையில்,

முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் தொடக்க கல்வித்துறையில் மாநில அளவிலான மூதூரிமை கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 04 ல் நடைபெறுகிறது.

நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதல் நிகழ்வாக கல்வியில் கலைஞர் என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவும், கவிதை நூல் வெளியீட்டு பரிசு அளிப்பு நிகழ்வும் நடைபெறுகிறது என்றார் அவர்.

இதையடுத்து. புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இயக்கப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் 5000 பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ள கோரிக்கைகள்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 2004 முதல் 2006 தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக மாற்றுதல்,பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையில் உள்ளது போல தொடக்கக் கல்வித் துறையில் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் உருவாக்க வேண்டும், ஈட்டிய விடுப்பு பணம் ஒப்படைப்பை மீண்டும் வழங்க வேண்டும், தொடக்க மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை இல்லை என அரசின் கொள்கை முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளன.
இதில், மாவட்ட செய்தியாளர் ரகமதுல்லா, மாவட்ட நிர்வாகிகள் பாபு சிவராம், பால்ராஜ், தனபால், கோவிந்த ராஜன், வெள்ளைச்சாமி, தயாளன், செல்லக்கண்ணு, வீரமணி கலையரசன், பிரவீன், சுப்பிரமணி, தவமணி ஜோதி பாசு, கணேசன், சசிகுமார், மாணிக்கம் சரவண பெருமாள், முருகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் நாயகம் வரவேற்றார்.நிறைவாக பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top