Close
ஜூலை 4, 2024 4:37 மணி

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் தலைமை அஞ்சலகம் முன்பாக மறியல் போராட்டம்

தஞ்சாவூர்

சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

ஒன்றிய அரசினுடைய மக்கள் விரோத, விவசாயிகள் விரோத தொழிலாளர் விரோத, கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் (16.2.2024)  பொது வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் தலைமை அஞ்சலகம் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில்  நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில்  கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டனர்.

பாபநாசத்தில் ஆர்.தில்லைவனம், பூதலூரில் ஆர் ராமச்சந்திரன், ஆர்.ஆர்.முகில் தலைமையிலும், ஒரத்தநாட்டில் வாசு இளையராஜா, பேராவூரணியில் சி.வீரமணி, துரை. பன்னீர்செல்வம்.

அதிராம்பட்டினத்தில் பூபேஷ் குப்தா, ஹாஜா மைதீன், சேதுபாவாசத்தரத்தில் தி. திருநாவுக்கரசு, பி.தட்சிணாமூர்த்தி, ஆர்.எஸ்தர்லீமா, திருவோணத்தில் ரெ.கோவிந்தராசு, மு.பால்ராஜ் தலைமையிலும்.

தஞ்சாவூர்
ஒரத்தநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்

மதுக்கூர் ஆலத்தூரில் கோ.சக்திவேல், இ.முருகேசன் தலைமையிலும், கல்லணையில் சோ.பாஸ்கர், ம.பிரபாகரன் தலைமையிலும் தஞ்சாவூரில் முத்து உத்திராபதி, வீ.மோகன், தலைமையிலும், பட்டுக்கோட்டையில் வே.சேவையா சி.பக்கிரிசாமி கும்பகோணத்தில் ஆர்.பி.முத்துகுரன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடத்தி நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top