Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

திருவண்ணாமலை வழியாக தென்னக கோயில்களை இணைக்கும் ரயில் சேவை..!

ரயில் வண்டி (கோப்பு படம்)

அகமதாபாத் திருச்சி இடையே காட்பாடி மற்றும் திருவண்ணாமலை வழியாக நான்கு மாதங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் திருச்சி இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அகமதாபாத்தில் இருந்து ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம் மற்றும் தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடையும்.

அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு

ஆகஸ்ட் 22 ,29ஆம் தேதி

செப்டம்பர் 5, 12, 19 ,26 தேதிகளிலும்

அக்டோபர்  3, 10 ,17 ,24 ,31 தேதிகளிலும்

நவம்பர் மாதம்  7 ,14, 21 ,28 தேதிகளிலும்

டிசம்பர் மாதம்  5 , 12 ,19, 26 தேதிகளிலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அகமதாபாத் ரயில்களையத்தில் வாரம் தோறும் வியாழக்கிழமை காலை 9.30க்கு புறப்பட்டு திருச்சி ரயில் நிலையத்திற்கு மூன்றாவது நாள் சனிக்கிழமை அதிகாலை 3 .45 மணிக்கு சென்றடையும்

காட்பாடி ரயில் நிலையத்தை வெள்ளிக்கிழமை பிற்பகல்  2.50 மணிக்கு வந்தடைந்து மீண்டும் 2. 55 க்கு புறப்பட்டு செல்லும். அதே போல் இந்த ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வந்தடைந்து ,   5. 2 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

திருச்சியிலிருந்து அகமதாபாத்திற்கு

ஆகஸ்ட் 25

செப்டம்பர் 1 8, 15 ,22, 29 ஆகிய தேதிகளிலும்

அக்டோபர் மாதம் 6,13 ,20 ,27 தேதிகளிலும்

நவம்பர் 3 ,10 ,17, 24 தேதிகளிலும்

டிசம்பர் மாதம் 1,8, 15 ,22 ,29 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

வாரம் தோறும் திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 .40 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத் ரயில் நிலையத்தை மறுநாள் திங்கட்கிழமை இரவு 9:15 மணிக்கு சென்றடையும் .

திருவண்ணாமலை ரயில் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை நண்பகல்  1.10  மணிக்கு, காட்பாடி ரயில் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  3.15 மணிக்கு சென்றடையும்  என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top