திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பிரதோஷ விரத பலனை இரண்டு மடங்காக தரக் கூடியது சனிப் பிரதோஷமாகும். ஆயிரம் சாதாரண பிரதோஷங்களுக்கு சமமானது ஒரு சனி மகா பிரதோஷம். மேலும் மகா சனி பிரதோஷத்தில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவன் கோயிலுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உத்ராயண பிரம்மோற்சவம் விழா நடைபெறுவதால் சனி பிரதோஷ விழா நடைபெறவில்லை.
கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
வேட்டவலம்:
வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள பிரதான நந்திக்கு தயிா், இளநீா், பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு, வில்வம், அருகம்புல், பூ ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் உள்ள மூலவருக்கு பால், பழம், தயிா், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்கள், வாசனைத் திரவியங்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
செய்யாறு:
செய்யாற்றில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும் நந்தி பெருமான் கிழக்கு நோக்கி அருளும் பிராா்த்தனை தலமான திருவோத்தூா் ஸ்ரீ வேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகா் நாயகி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதையடுத்து பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மற்ற ஊா்களில்: இதேபோல, தண்டராம்பட்டு, தானிப்பாடி, வந்தவாசி, ஆரணி, போளூா், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.