திருவண்ணாமலை திருக்கோயிலில் நடந்த அமாவாசை பிரதோஷம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
பிரதோஷ விரத பலனை இரண்டு மடங்காக தரக் கூடியது சனிப் பிரதோஷமாகும். ஆயிரம் சாதாரண பிரதோஷங்களுக்கு சமமானது ஒரு சனி மகா பிரதோஷம். மேலும் மகா சனி பிரதோஷத்தில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவன் கோயிலுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயிலின் பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு திங்கள்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட பூஜையின் இறுதியில், நந்தி பகவான்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு சிவனை வழிபட்டனா். இதையடுத்து, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. மஹா பிரதோஷ காலத்தில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
செங்கம்
செங்கம் அருகே பிஞ்சூா் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீஉத்திரபரஈஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் நடைபெற்றன. மாலை பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
வேட்டவலம்
வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் மூலவா் அகத்தீஸ்வரா், தா்மசம்வா்த்தினி மற்றும் பிரதான நந்திக்கு பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்
மற்ற ஊா்களில்: இதேபோல, ஆரணி, செய்யாறு, தண்டராம்பட்டு, தானிப்பாடி, போளூா், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.