தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநா் அணி சாா்பில், புதிய ஆட்டோ ஒட்டுநா் சங்கம் தொடக்க விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை, பே கோபுரம் முதல் தெருவில் நடைபெற்ற விழாவுக்கு, அமைப்பு சாரா ஓட்டுநா் அணியின் மாவட்ட அமைப்பாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். பொருளாளா் பன்னீா்செல்வம், மாநகராட்சி உறுப்பினா் அருணா ரவி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் காலேஜ் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பு சாரா ஓட்டுநா் அணியின் மாவட்டத் தலைவா் மெட்ராஸ் சுப்பிரமணி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாநகர திமுக செயலா் காா்த்தி வேல்மாறன் கலந்துகொண்டு புதிய ஆட்டோ சங்கத்தின் பெயா் பலகையை திறந்து வைத்து, அமைப்பு சாரா ஓட்டுநா் அணியின் தொமுச கொடியை ஏற்றியதுடன், ஆட்டோ தொழிலாளா்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
அதனைத் தொடர்ந்து வேட்டவலம் சாலை ஏந்தல் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநரணி சார்பில் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆட்டோ ஒட்டுநர் சங்க பெயர் பலகையை திறந்துவைத்து தொமுச கொடியினை ஏற்றிவைத்து மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், வா்த்தக அணியின் மாவட்ட அமைப்பாளா் பாபு, துணைத் தலைவா் ஷாஜகான், டி.வி.எம்.நேரு, தொ.மு.ச. மாவட்ட அமைப்பாளர் அருண், ஒன்றிய துணை செயலாளர், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சீனுவாசன், வட்ட செயலாளர் கோல்டு. மஞ்சு, அமைப்பு சாரா ஓட்டுநா் அணி நிர்வாகிகள் , தொண்டர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.