தென்மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில், கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகில் உள்ள சரலபள்ளியில் இருந்து திருவண்ணாமலை, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட செய்தி தொடர்பு அலுவலர் ஆர்.வினோத், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
தெலங்கானா மாநிலம் சாரலப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை இரவு 9.50 மணிக்கு கோடை கால சிறப்பு ரயில் (எண் – 07230) புறப்படும். குண்டூர், ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி மற்றும் காட்பாடி வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை மறுநாள் (வியாழக்கிழமை) நண்பகல் 12.40 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர், இங்கிருந்து நண்பகல் 12.42 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோயில் வழியாக வெள்ளிக் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
சாரலப்பள்ளி ரயில் நிலையத்தில்கன்னியாகுமரி வரை இயக்கப்படும் தேதிகள்
அடுத்த மாதம் 2-ந் தேதி, 9, 16, 23, 30-ந் தேதி, மே மாதம் 7-ந் தேதி, 14, 21, 28-ந் தேதி, ஜூன் மாதம் 4, 11, 18, 25-ந் தேதிகளில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.07229) கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந் தேதி, மே மாதம் 2, 9, 16, 23, 30-ந் தேதி, ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வந்தடையும். பின்னர், இங்கிருந்து 6.02 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை பகல் 11.40 மணிக்கு சரலப்பள்ளி சென்றடைகிறது.
இதில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.