Close
மார்ச் 25, 2025 2:05 காலை

செய்யாறில் வளா்ச்சிப் பணிகள் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம்..!

வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட திட்ட இயக்குனர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி ஆய்வு மேற்கொண்டாா்.

செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.5.90 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டடம், ரூ.9.80 கோடியில் வட தண்டலம், செங்கட்டான்குண்டில், ஏனாதவாடி வடுக்கப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் கலைஞா் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து திட்ட இயக்குநா் மணி கள ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும்  அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், முதல்வரின் கிராமச் சாலைத் திட்டம்,  கலைஞரின் கனவு இல்லம், ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் ,

குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள்,

நகராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முகமை திட்ட இயக்குநா் மணி  அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், உதவி பொறியாளா்கள் ராமு, செல்வா, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சிச் செயலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top