Close
மார்ச் 7, 2026 11:44 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா..!

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பாக கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் சேக்கிழாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் கைவினைத் தொழில் முனைவோருக்கான கடனுதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர்

முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வை திருவண்ணாமலை மாவட்ட கைவினைத் தொழில் முனைவோா் காணும் வகையில் ஒளிபரப்பும் நிகழ்வும், மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவும் சனிக்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் முன்னிலை வகித்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வுகள் முழுமையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

தமிழக அரசு தையல் கலைஞா்கள், குயவா்கள், சிற்பிகள் உள்பட பல்வேறு கலை மற்றும் கைவினைத் தொழில்களில் ஈடுபடும் கைவினைஞா்களுக்கு திறன் பயிற்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு ஆதரவு அளிக்க கலைஞா் கைவினைத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டம் 2024-2025 முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. திட்டத்தின் கீழ் கட்டட வேலை, மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், நகை வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை, துணி வெளுத்தல் மற்றும் தேய்த்தல் போன்ற 25 வகையான கைவினைத் தொழில் இனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படும்.

இந்தக் கடனுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மானியமும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 35 வயது நிரம்பிய தகுதியானோா் மாவட்ட தொழில் மையத்தை அணுகி, விண்ணப்பித்துப் பயன்பெறலாம் .

இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம் அவர்களின் தலைமையிலான தேர்வுக் குழு மூலம் தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்யப்பட்டு வங்கிக்குப் பரிந்துரை செய்யப்படும். தேர்வுக் குழுவால் செய்யப்படும் தெரிவு விண்ணப்பங்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கி. தாய்கோ வங்கி போன்ற வங்கிகளுக்கு கடன் வழங்கிடப் பரிந்துரை செய்யப்படும். வங்கியின் மூ ல ம் கடன் ஒப்பளிப்புக் கடிதம் பெற்றவுடன் தொழில் முனைவோர்களுக்குத் தொழில் சார்ந்த திறன் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்றாா்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கெளரி வங்கிக் கடனுதவிகளை பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கிக் கூறினாா்.

இதில், மாவட்ட தொழில் மைய அலுவலக அதிகாரிகள், சிட்கோ கிளை மேலாளா், கலைஞா் கைவினைத் திட்ட விண்ணப்பதாரா்கள், அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய அமைப்புகள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், திருவண்ணாமலை மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கூட்டமைப்புகள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top