தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு, சம்மந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர் பதில் அளிப்பது கடமையாகும். உரிய தகவல் அளிக்காத நிலையில், மேல்முறையீடு விசாரணையை மாநில தகவல் ஆணையம் மேற்கொள்கிறது.
அதன்படி, தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் மாநில தகவல் ஆணையர் தலைமையில் தகவல் ஆணையம் மேல்முறையீடு விசாரணை முகாம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா்.

முகாமில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தகவல் கேட்டு அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தகவல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து, சம்மந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலர்களை அழைத்து நேரில் விசாரணை நடத்தினர்.
மேலும், திருவண்ணாமலை மாவட்ட அரசுத் துறைகளின் பொதுத்தகவல் அலுவலா்கள் பதிலளிக்காத காரணத்தால் மேல்முறையீடு செய்யப்பட்ட 60 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டது. தலைமை தகவல் ஆணையா் மா.செல்வராஜ் தலைமையிலான தகவல் ஆணையா்கள் இந்த விசாரணையை மேற்கொண்டனா்.
விசாரனையின்போது மேல்முறையீட்டு மனுதாரா்கள் மற்றும் பொது தகவல் அலுவலா்களை நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டது. இறுதியாக, 10 மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையரால் உடனடி தீா்வு காணப்பட்டது.
இது முகாமில் மனுதாரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேல்முறையீடு மனுக்களை அளித்தவர்கள், நேரடியாக சென்னைக்கு சென்று விசாரணையில் பங்கேற்க முடியாது என்பதால், மாவட்ட அளவில் இதுபோன்ற முகாம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.