திருவண்ணாமலையின் முக்கிய இடங்களில் நாளை (சனிக்கிழமை) பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மே 3ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யும் இடங்களில் பகல் நேர மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார் .
இது குறித்து திருவண்ணாமலை மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் மே 3ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் இடங்களில் பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, பின்வரும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்
திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துர்க்கை நம்மியந்தல், நொச்சிமலை, மலப்பாம்பாடி, தென் அரசம்பட்டு, வடஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ் நாச்சிப்பட்டு, வள்ளிவாகை, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மேலும் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.