திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். சித்திரை மாதத்தில் வருகின்ற பெளர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்த்திருப்பதால் அன்றைய தினம் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த வருடமும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொடர்ந்து அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தியும், நேரில் சென்று ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் ஒத்தவாடைத் தெரு, ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மாட வீதியைச் சுற்றியுள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடரந்து, அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, கிரிவல பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு அவா் உத்தரவிட்டாா். பிறகு, அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியை ஆய்வு செய்தாா்.
அப்போது, வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கு குடிநீா் முறையாக வழங்க வேண்டும். நடைபாதைகளில் நிழல்பந்தல்கள், அதிகப்படியான மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பாண்கள், தேங்காய் நாா் விரிப்புகளை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், கூடுதல் எஸ்பி சதீஷ், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் மோகன்ராம், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி , மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.