திருவண்ணாமலை வட்ட அளவிலான குறை தீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் ஒரு சிலா் மட்டுமே கலந்துகொண்டனா்.
அப்போது கூட்டத்தில் துறைவாரியான அதிகாரிகள் பங்கேற்க வராததால் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிற்படியில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கார்கோணம் எஸ். சந்திரசேகரன், விவசாயசங்க பிரிதிநிதி வெள்ளைக்கண்ணு ஆகியோர் தலைமையில் விவசாயிகள் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது அனைத்துதுறை அலுவலர்கள் பங்கேற்றால் மட்டுமே விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்போம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து துணை ஆட்சியர் தேர்தல் கோ.குமரன் கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் மத்தியில் இன்றைய விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் வரும் செவ்வாய் கிழமைக்குள் மீண்டும் குறைதீர்வு கூட்டம் நடத்த ஆட்சியரின் அனுமதி பெற்று கூட்டம் நடத்தப்படும் அடுத்த கூட்டத்தில் அனைத்துதுறை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்றார். அதனைத் தொடர்ந்து விவசாய பிரநிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் கலைந்து சென்றனர்.

கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை விவசாயி குற்றச்சாட்டு
செங்கம் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் பேசிய காயம்பட்டை சோ்ந்த விவசாயி நவமணி, குறைதீா் கூட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள், வழங்கப்படும் மனுக்கள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டினாா்.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா் பேசும்போது, விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
2024 டிசம்பா் மாதம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட செங்கம் பகுதியைச் சோ்ந்த 650 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனா். கூட்டத்தில் துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.