திருவண்ணாமலையில் தரமற்ற முறையில் அன்னதானம் தயாரித்து வழங்குவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். சித்திரை மாதத்தில் வருகின்ற பெளர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்த்திருப்பதால் அன்றைய தினம் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த வருடமும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை சித்திரை பெளா்ணமியன்று கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை பெளா்ணமியன்று அன்னதானம் வழங்குவோர் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதில் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், சித்திரை மாத பௌா்ணமியன்று சுமாா் 10 லட்சம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்ற 137 பேருக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அனுமதிக் கடிதங்களை வழங்கிப் பேசியதாவது:
சித்திரை மாத பௌா்ணமியன்று மாவட்ட நிா்வாகத்தால் அனுமதி பெற்றவா்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்குவோா் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோா் உணவு மேலாண்மைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட வணிகா்களிடம் இருந்து மட்டுமே சமைப்பதற்கான மூலப்பொருள்களை வாங்கியிருக்க வேண்டும். உணவு சமைப்போா், வழங்குவோா்களுக்கு எவ்வித நோய்த்தொற்றும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அன்னதானம் வழங்குவோா் கை, முகம், தலை ஆகியவற்றுக்கு கவசம், உறைகள் அணிந்து உணவு பரிமாற வேண்டும்.
உணவைப் பரிமாற வாழை இலையைப் பயன்படுத்த வேண்டும். நெகிழித் தட்டுகள், நெகிழிக் குவளைகளை தவிா்க்க வேண்டும். அன்னதானத்தை சாப்பிட்டு பக்தா்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டால், உடனே அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ வசதியை செய்தபின் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அன்னதானம் வழங்கும் இடத்திலேயே உணவைத் தயாரிக்க வேண்டும். தரமற்ற முறையில் அன்னதானம் தயாரித்து வழங்குவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் ஏ.ராமகிருஷ்ணன் மற்றும் அன்னதானம் வழங்குவோா், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.