சித்திரை மாத பௌர்ணமியொட்டி ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் வயதானோா், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக்கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த வருடமும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன், செய்தியாளர்களிடம் கூறுகையில்
சித்திரை மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை (மே 11) இரவு 8.53 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை (மே 12) இரவு 10.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வயதானோா், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் தாய்மாா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பேட்டரி காா் மூலம் மேற்கு பே கோபுரம் வழியாக கட்டை கோபுரம் வரை அழைத்துவரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தா்கள் தொடா்ந்து சுவாமி தரிசனம் செய்ய வசதியாக வரும் 12-ஆம் தேதி ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டு, கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உபயதாரா்கள் மற்றும் கோயில் நிா்வாகம் மூலம் பக்தா்களுக்கு 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1.25 லட்சம் கடலை மிட்டாய்கள், தேவையான அளவு தா்பூசணி மற்றும் 2 லாரிகளில் மோா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவச, சிறப்பு தரிசன வழித்தடங்களில் 114 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டு மணிக்கு 14,050 லிட்டா் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வரிசையில் வரும் பக்தா்களுக்கென 10 எண்ணிக்கையிலான சின்டெக்ஸ் டேங்குகள் அமைத்து கூடுதலாக குடிநீா் வழங்கப்படும்.
அனைத்துத்துறை அலுவலா்கள் ஒருங்கிணைக்கும் பொருட்டு கோயிலில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றாா்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோயில் உதவி ஆணையா் ராமசுப்பிரமணி, கோயில் கண்காணிப்பாளா் கண்ணன், கோயில் மேலாளா் கருணாநிதி (எ) செந்தில், கோயில் மணியக்காரா் ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.