Close
மார்ச் 7, 2026 2:56 மணி

சித்ரா பௌர்ணமி அடிப்படை வசதிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு

உணவு அருந்தி ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர் .

அதன்படி இந்த வருடம் சித்ரா பெர்ணமி 11.05.2025 இரவு 08.53 மணியளவில் தொடங்கி 12.05.2025 இரவு 10.48 மணியளவில் நிறைவடைகின்றது.

எனவே சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் எவ்வித  சிரமுமின்றி சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொளுவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தொடர்ந்து அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தியும், நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகம் எதிரில் மற்றும் மணலூர்பேட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள அன்னதான கூடங்களுக்கு நேரில் சென்று உணவு அருந்தி ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள மலையை வலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அன்னதானம் வழங்குவர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அன்னதானம் சமைக்கும் இடத்தினை பார்வையிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பாக நெய், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஆய்வின் மூலம் பரிசோதனை மேற்கொண்டதை பார்வையிட்டு ஆய்வு செய்து பக்தர்களுக்கு வழங்கும் உணவின் தரத்தினை உண்டு ஆய்வு செய்தார்.

மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அவசர ஊர்தி சேவை தயார் நிலையில் உள்ளதையும், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு சாலையில் நீர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, உணவு பாதுகாப் புத்துறை நியமன அலுவலர் மரு. இராமகிருஷ்ணன் , வட்டாட்சியர் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top