திருவண்ணாமலை தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை சம்மந்தப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறைவு நாளன்று விவசாயிகள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், போளூர் தாலுகாவில் டிஆர்ஓ ராம்பிரதீபன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. சேத்துப்பட்டு தாலுகாவில் செய்யாறு உதவி கலெக்டர் தலைமையில் வரும் 22ம் தேதி வரையிலும், தண்டராம்பட்டு தாலுகாவில் திருவண்ணாமலை ஆர்டிஓ தலைமையில் வரும் 21ம் தேதி வரையிலும், ஆரணி தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வரும் 23ம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெறும்.
மேலும், கலசபாக்கம் தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) தலைமையில் வரும் 21ம் தேதி வரையும், செங்கம் தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைைமயில் வரும் 23ம் தேதி வரையும், வெம்பாக்கம் தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையில் வரும் 23ம் தேதி வரையும், செய்யாறு தாலுகாவில் பழங்குடியினர் நல திட்ட இயக்குநர் தலைமையில் வரும் 29ம் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெறும். மேலும், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் வரும் 21ம் தேதி வரையும், வந்தவாசி தாலுகாவில் கலால் உதவி ஆணையர் தலைமையில் வரும் 29ம் தேதி வரையும், ஜமுனாமரத்தூர் தாலுகாவில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தலைமையில் வரும் 20ம் தேதி வரையும் ஜமாபந்தி நடைபெறும்.
மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடைபெறுவதால், மாவட்ட அளவிலான மற்றும் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆகியவை வரும் 29ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் குறைதீர்வு கூட்டம் வழக்கம் போல 19ம் தேதி மற்றும் 26ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் க.தர்ப்பகராஜ் தலைமையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்டம் நாயுடுமங்கலம் உள்வட்டத்திற்குட்பட்ட மேப்பத்துறை , நார்த்தாம் பூண் டி , பெரியகிளாம்பாடி , கார்கோணம், வடபுழுதியூர், பொற்குணம், சாலையனூர், தேவனாம்பட்டு உள்ளிட்ட 8 வருவாய் கிராமங்களை சார்ந்த பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை சண்முகம், திருவண்ணாமலை வட்டாட்சியர் மோகனராமன், தனி வட்டாட்சிய ர் சமூக பாது காப்பு திட்டம் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.