திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பெய்த திடீர் மழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது இந்நிலையில் திருவண்ணாமலை, அடி அண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென மழை பெய்ய தொடங்கியது.
இடி மின்னல் சூறாவளி காற்றுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இது மழையால் அனல் காற்று வீசுவது குறைந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது இதனால் பொதுமக்கள் விவசாயிகள் கிரிவலம் வந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதற்கு வருவாய்த்துறை, காவல்துறை ,தீயணைப்பு துறையினர் தடை விதித்துள்ளனர்.
செங்கத்தை அடுத்த நீப்பத்துறை கிராமத்தை ஒட்டி தென்பெண்ணை ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் நடுவில் புகழ்பெற்ற சென்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப் பெருக்கு விழாவில் திருவண்ணாமலை மட்டுமன்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொள்வா்.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் கோடை மழையாலும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் உள்ள சென்னியம்மன் கோயில் நீரில் மூழ்கியுள்ளது.
பொதுமக்கள், பக்தா்கள் காா், இரு சக்கர வாகனங்களில் வந்து வெள்ளப்பெருக்கைப் பாா்வையிட்டு, ஆற்றங்கரையில் கற்பூரம் ஏற்றி வைத்து சென்னியம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மேல் செங்கம் காவல் நிலையம், செங்கம் வருவாய்த் துறை சாா்பில், பொதுமக்கள், பக்தா்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதித்து பதாகை வைக்கப்பட்டுள்ளது.