திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மோட்டூர் நட்சத்திர கோவல் அருகே உள்ள பேருந்து பணிமனை நீண்ட ஆண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாததால் புதிய பேருந்து டயர் யூனிட்டாக அமைப்பதற்கு அண்ணாதுரை எம்பி , கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை பொது மேலாளர் ஸ்ரீதர், தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், தொமுச மண்டல செயலாளர் சௌந்தர்ராஜன், போக்குவரத்து துறை துணை மேலாளர் வணிகம் கலைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அண்ணாதுரை எம்பி புதிய பஸ் டயர் யூனிட்டாக அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசியதாவது;
கலசபாக்கம் அடுத்த மோட்டூர் பேருந்து பணிமனை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது அதை சரியான முறையில் அமைக்காததாலும் போதுமான வசதிகள் இல்லாததாலும் மற்ற அடிப்படை தேவைகள் இல்லாததாலும் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. அதை இதற்கு முன்பு இருந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் யார் இதைக் கொண்டு வருவது என்று இருவருக்குள் போட்டி ஏற்பட்டு கொண்டு வராமல் இருந்தனர்.
ஆனால் இப்பொழுது அதை நான் ஆய்வு செய்து உடனடியாக அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக எம்எல்ஏ சரவணன் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினிடமும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடமும், தொடர்ந்து கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று போக்குவரத்து பணிமனையை பயன்படுத்த முடியாது. அதற்கு உண்டான வசதிகள் மற்றும் அத்தியாவசியமான தேவைகள் மற்றும் நிதிநிலை எதுவும் சரியான முறையில் இல்லாததால் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி வழங்கினால் அதை புதிய டயர் யூனிட் ஆக மாற்றி அமைத்துக் கொடுக்கப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அறிவித்தார்.
அதன்படி அமைப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் பணிகளை துவங்குவதற்கு இப்போது துவங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய பேருந்து டயர் யூனிட்டாக அமைத்து இதன் மூலம் தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துக் கொடுத்து மோட்டூர் பகுதியில் பேருந்து டயர் யூனிட் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதனால் இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள்
மேலும் இந்த புதிய டயர் யூனிட் அமைப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர் என்னுடைய நிதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் வழங்குகிறோம். என்று அண்ணாதுரை எம்பி கூறினார்.
நிகழ்ச்சியில் துணை மேலாளர் தொழில்நுட்பம் துரைராஜ், கிளை மேலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.