Close
மே 30, 2025 3:52 மணி

அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்அக்னி தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜைகள்

வெட்டிவேர் விமானத்தில் ஸ்ரீ அண்ணாமலையார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மற்றும் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் அக்னிதோஷ நிவர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தியை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கல மேள வாத்தியத்துடன் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு 1008 கலசாபிஷேகம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் நிவர்த்தி அடையும் நாள் வரை அண்ணாமலையாருக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு வெட்டி வேர், பன்னீர், மூலிகை திரவியங்கள் உள்ளிட்டவைகள் தாராபாத்திரத்தில் கலந்து சொட்டு சொட்டாக தாராபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்றுடன் அக்னி நட்சத்திர தோஷ நிறைவு பெற்றதை முன்னிட்டு 1008 கலசாபிஷேகம் செய்து அக்னி நட்சத்திரம் தோஷம் நிவர்த்தியடைந்தது.

சிவாச்சாரியார்கள் உண்ணாமுலை அம்மன் சன்னதி அருகே உள்ள தங்க கொடிமரம் முன்பு மிக பெரிய யாகசாலை அமைத்து கடந்த 2 தினங்களாக 4 கால யாக பூஜைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி நாளான நேற்று யாகசாலையில் 4ஆம் கால யாகத்துடன் பூர்ணாஹுதி நடைபெற்று பின்னர் யாகசாலையில் இருந்து அண்ணாமலையாருக்கு 1008 கலசங்களையும், உண்ணாமுலை அம்மனுக்கு 108 கலசங்களையும் மேள வாத்தியத்துடன் வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று உச்சிக்கால வேளையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு கலசாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இரவு 8 மணிக்கு வெட்டிவேர் விமானத்தில் சுவாமி மாட  வீதியுலா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமம்

திருண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு  சுவாமிகளுக்கு இளநீா், சந்தனம், பால், பழம், பன்னீா், உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு  சிறப்பு அபிஷேகம் செயப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முன்னதாக கலச ஸ்தாபனம் செய்து சிறப்பு ஹோமம், பூஜைகள் நடத்தப்பட்டு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளுக்கு கலசபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு நீர்மோர், சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top