Close
ஜூன் 1, 2025 4:28 காலை

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : விவசாயிகளை தேடி வரும் சேவைகள்..!

வேளாண் துணை இயக்குனர் மாலதி மற்றும் சார்பு துறை அலுவலர்கள் 31 விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிங்க்சல்பேட் வழங்கினர். அருகில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி.

வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டம் குறித்து வேளாண் துணை இயக்குனர் மாலதி விளக்கமளித்தார்.

 

வேளாண்மை விரிவாக்க சேவைகள் மற்றும் மானிய திட்டங்கள் உழவர்களுக்கு அவரவர் கிராமங்களில் கிடைப்பதை உறுதி செய்யும் உழவரைத் தேடி வேளாண்மை *துறை திட்ட முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேளாண் துணை இயக்குனர் மாலதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயிகள் பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு மீன் வளர்ப்பு தோட்டக்கலை பயிர் சாகுபடி போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சார்பு துறைகளின் மானியத் திட்டங்கள் குறித்த விபரங்களை ஒருங்கிணைத்து உழவர்களிடம் நேரடியாக அவரவர் கிராமங்களில் வழங்கிட முதல்வர் அவர்களால் செயல்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தினம் மதுக்கூர் வட்டாரத்தில் அண்டமி மற்றும் அத்திவெட்டி கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை துறை திட்ட முகாம் நடைபெற்றது.

 

வேளாண் துணை இயக்குனர் மாலதி வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் பற்றி விளக்கி கூறியதோடு விவசாயிகளின் தொழில்நுட்ப தேவைகள் மற்றும் இடர்பாடுகள் சரி செய்வது குறித்து அந்தோணி கிராமம் முன்னோடி விவசாயிகள் சுமதி பாஸ்கர் வெங்கடாஜலபதி.சக்திவேல். இளஞ்செழியன் ராஜா மற்றும் தங்கதுரைஆகியோருடன் கலந்துரையாடினார்.

கால்நடை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு மானிய திட்டங்கள் மற்றும் கால்நடை பராமரிப்பில் தடுப்பூசி பயன்படுத்தும் உடன் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார். பட்டுக்கோட்டை கூட்டுறவு சார்பதிவாளர் முருகன் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினராக சேர்வது முக்கியத்துவம் மற்றும் வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுவது பற்றி விளக்கி கூறினார்.

தோட்டக்கலை துறையின் திட்டங்கள் பற்றி உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி ஒட்டு மாங்காய் ரகங்கள் மற்றும் வீட்டு காய்கறி தோட்ட விதை தொகுப்பு பற்றி எடுத்து கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் பூமிநாதன் ஜெரால்ட் முருகேஷ் ஆகியோர் வேளாண் கருத்துக்காட்சியினை ஏற்பாடு செய்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பிரசுரங்களை வழங்கி விளக்கம் அளித்தனர்.

அண்டமி மோகூர் பாசன குழு தலைவர் சக்திவேல் கீழக்குறிச்சி அணைக்கட்டு வலதுபுற பாசன வாய்க்காலை தூர்வாரி தர கோரிக்கை வைத்தார். உழவரை தேடி வேளாண்மை துறை போர்டலில் பல்வேறு விவசாயிகளின் கோரிக்கைகளை சிசி பணியாளர்கள் வைஷ்ணவி மற்றும் விஷாலினி பதிவு செய்தனர். மதுக்கூர் வட்டார பயிர் இன்சூரன்ஸ் பெற்று அலுவலர் மணி இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார். வேளாண் துணை இயக்குனர் மாலதி மற்றும் சார்பு துறை அலுவலர்கள் 31 விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிங்க்சல்பேட் வழங்கினர்.

மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி உழவரை தேடி வேளாண்மை துறை திட்ட முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நான்கு கிராமங்களில் 12 மாதங்களிலும் நடைபெற உள்ளது குறித்தும். 50 சத கிராமங்கள் வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையிலும் 50 சத கிராமங்கள் தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமையிலும் நடைபெற உள்ளது.

விதை சான்று துறை வேளாண்மை அலுவலர் சங்கீதா விதை பண்ணை அமைத்து தரமான விதைகள் உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

எனவே மதுக்கூர் வட்டார விவசாயிகள் தங்கள் தொகுதி வேளாண் உதவி அலுவலரை தொடர்பு கொண்டு தங்கள் கிராம முகாமில் கலந்து கொண்டு விவசாயத்துறை திட்டங்கள் மட்டும் இன்றி சார்பு துறையின் திட்டங்களையும் அறிந்து பயன் பெற கேட்டுக்கொண்டு அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top