Close
ஏப்ரல் 24, 2026 5:29 காலை

மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாய பயிற்சி..!

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் வம்பன்8 உளுந்து விதைகள் வழங்கப்பட்டது.

மதுக்கூர் வட்டாரம் மன்னாங்காடு கிராமத்தில் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கதிட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து முதல்நிலை புத்தூட்ட பயிற்சி பதிவு செய்த 125 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கோ. வித்யா பயிற்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் இயற்கை வேளாண்மைக்கு அரசு வழங்கும் முக்கியத்துவத்தைப் பற்றி வேளாண்மை துணை இயக்குனர் சி. மாலதி மத்திய திட்டம், சிறப்பாக விளக்கி கூறினார்.

மேலும் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்த செய்தியினை வேளாண்மை அறிவியல் நிலையம் வேளாண் விஞ்ஞானி பிரபாகர் விவசாயிகளுக்கு விளக்கினார். பின்னர் இயற்கை வேளாண்மை குறித்து எவ்வாறு திறம்பட செய்வது என்பதனை பற்றி அவர் செய்துவரும் இயற்கை வேளாண் விவசாயத்தைப் பற்றி பெரிய கோட்டை கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் தலைமை பயிற்சியாளர் விவசாயிகளுடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

மேலும் இயற்கை விவசாயத்தில் மண்புழு மற்றும் நாட்டு மாட்டின் முக்கியத்துவத்தை பற்றி முனைவர் நவீன் சேவியர் விதை ஆய்வாளர், விளக்கி கூறினார். முன்னதாக மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் சு. திலகவதி வரவேற்றார்.

இதில் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் சரவணன் மற்றும் பிஜாமிர்தம் தயாரிப்பு பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியினை உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெரால்டு , முருகேஷ் மற்றும் கிசான்சஹி ஈஸ்வரி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பைசல் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊக்க தொகை மற்றும் வம்பன்8 உளுந்து விதைகள் வழங்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top