Close
ஜூன் 1, 2025 12:51 காலை

ஜமாபந்தி நிறைவு விழா, விவசாயிகள் மாநாடு..!

நலத்திட்ட உதவிகளைவழங்கிய துணை சபாநாயகர் மற்றும் ஆட்சியர்

தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவ ர் கு.பிச்சாண்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் கதர்ப்பகராஜ், ஆகியோர் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைவழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை து ணைத்தலைவ ர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி, இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1434- ஆம் பசலி வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பாக நடைபெறுகின்ற ஜமாபந்தியில் ஒவ்வொரு உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெ ற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது வருவாய் துறை சார்ந்த அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் 4 ஆண்டு ஆட்சியில் விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு பல்வேறு சீரிய திட்டங்களைசெயல்படுத்தி, அவர்கள் பொருளாதார மேம்பாடு அடைவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார். மேலும் விவசாயிகளுக்கான நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

மேலும் திருவண்ணாமலைக்கு வருகை புரியும் பொது மக்களின் தேவைக்காக புறவழிச்சாலைகள் உள்ளிட்ட சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிவதால் நமது மாவட்டம் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அவ்வாறு வருகைபுரிபவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது நமது கடமையாகும். தமிழ்நாடு அரசு பல்வேறு தரப்பு மக்கள் பயனடையும் வகையில் எண்ணற்றமக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியானபல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. எனவே அனைத்து திட்டங்களையும் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவரும் தினம் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி 2025 நிறைவு விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக 108 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், நத்தம் பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 80 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும் ,சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 38 பயனாளிகளுக்கு ரூ. 8 இலட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக ரூ. 1 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், 4 பயனாளிகளுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை வேளாண்மை சாகுபடி சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ. 31 ஆயிரத்து 795 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள் .

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கண்ணகி, வட்டாட்சியர் மோகனராமன், மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், விவசாய சங்க பிரதிநிதிகள்,விவசாயிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top