Close
ஜூன் 1, 2025 10:31 மணி

செய்யார் அருகே பள்ளி கட்டிடம், நாடக மேடையை திறந்து வைத்த எம் எல் ஏ

கட்டிடங்களை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அனக்காவூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம், நாடக மேடை ஆகியவற்றை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அனக்காவூர் ஊராட்சியில்  எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், 2024 – 25ஆம் ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.7 லட்சத்தில் புதிதாக கலைஞா் கலை அரங்க கட்டடமும், எச்சூா் ஊராட்சி மலைவையாவூா் கிராமத்தில் 2023 – 24ஆம் ஆண்டு ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் மூலம் ரூ.32.80 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய பள்ளிக் கட்டடமும் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இந்தக் கட்டடங்களை பள்ளி மாணவா்கள், கிராம மக்களின் பயன்பாட்டுக்காக தொகுதி எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்து சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

அதன் பின்னா், புரிசை கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை சாா்பில், ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தொழில்பயிற்சி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.கே.ரவிக்குமாா், மாவட்ட விவசாய உற்பத்திக் குழு உறுப்பினா் புரிசை எஸ்.சிவகுமாா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ராஜ்குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரவிச்சந்திரன், ஒப்பந்ததாரா் அன்பழகன், கிளைக் கழக நிா்வாகிகள் தனசேகா், பழனி, குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top