Close
ஜூன் 2, 2025 1:11 மணி

வீட்டிலிருந்தே பாலின வேறுபாடுகளை களைந்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை குறையும்: முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசி

பாலின சமத்துவம்,பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுதல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்வினை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசி திருமதி.பிரபா ஸ்ரீதேவன் துவக்கி வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் , காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சார்பில், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் இன்று முன்னாள் உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் அவர்கள்  பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுதல் குறித்து மாவட்ட அளவிலான ஓரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, உரையாற்றினார்கள். அப்போது அவர் கூறியதாவது:

பெண்களுக்கு வீட்டில் அளிக்கும் உரிமையை காணும் குழந்தைகள் பாலின பாகுபாடுகள் இன்றி அமையும் நிலையில் குற்றங்கள் குறையும். ஓவ்வொரு வீட்டிலிருந்தே பாலின வேறுபாடுகளை களைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட நீதிபதி செம்மல், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்.பி. சண்முகம் மற்றும் நீதித்துறை சார்ந்த சிறப்பு விருந்தினர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறிக்க விழிப்புணர்வு விளக்க உரை அளித்தனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று ஒரு நாள் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top