Close
ஜூன் 2, 2025 1:46 மணி

காஞ்சிபுரம் அருகே 12 வருடங்கள் தொடர்ந்து ஒன்றாக படித்த பள்ளி மாணவ, மாணவியர் சந்திப்பு.

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அதன் அருகிலேயே மேல்நிலைப்பள்ளி என செயல்பட்டு வருகிறது.

இதில் ஐயங்கார்குளம், கோளிவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் தொடக்கக் கல்வி மூலம் மேல்நிலை கல்வி வரை இன்று வரை பயின்று வருகின்றனர்.

அவ்வகையில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பயின்ற மாணவ, மாணவியர்கள் 200 பேர் வாட்ஸ் அப் குழு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சந்திப்பு இன்று பள்ளி வளாகத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் என அனைவரும் வரவழைக்கப்பட்டு அவர்கள் தலைமையில் சந்திப்பு நிகழ்ச்சி பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் பேசிய ஆசிரியர்கள் தங்களிடம் பயின்ற மாணவ மாணவிகளை கண்ட மகிழ்ச்சியில் கண்ணீர் மல்கினர்.

இதே போல் மாணவர்கள் தாங்கள் பயின்ற காலத்தில் ஆசிரியர்களின் கண்டிப்பு தொடர் கண்காணிப்பு ஆகியவையே ஒழுக்கமுடன் கல்வி கற்று தற்போது பேராசிரியர்களாகவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், காவல்துறை, கணினி பொறியாளர்கள் என நல்ல நிலைக்கு தங்களை வளர்த்து உள்ளது என பெருமிதத்திலும் தெரிவித்தனர்.

தங்கள் கல்வி பயின்ற பள்ளிக்கு ரூபாய் 15,000 மதிப்புள்ள மின்விசிறி, டேபிள். என நினைவுப் பரிசுகளாக வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து கேக் வெட்டி அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி பழைய நினைவுகளை கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு அனைவரும் ஓரே பகுதியில் அமர்ந்து சினிமா பாடலுக்கு ஏற்ப உண்டு மகிழ்ந்தனர்.

அவ்வப்போது மாணவர்கள் பேசும் செய்திகள் கேட்க டிஜே மூலம் இசையும் இசைக்கப்பட்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் மூன்று மணி நேரத்தை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top