இரட்டை கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, நெடுஞ்சாலை ரோந்து பணியின் போது பதிவுவெண் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்து சிறப்பாக பணி செய்த காவல் ஆளிநர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் நற்சான்று வழங்கி பாராட்டினார்.
கடந்த 20.05.2025ஆம் தேதி அன்று செஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாம்பட்டு கிராமத்தில் வயதான தம்பதியினரை உறவினரே கொலை செய்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கைது செய்ய உதவிய அவலூர்பேட்டை காவல் நிலைய முதல் நிலை காவலர் ஏழுமலை
செஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்பத்தி கிராமத்தில் கடந்த 28.05.2025 ஆம் தேதி அன்று நடந்த கொலை முயற்சி வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கைது செய்த உதவி காவல் ஆய்வாளர் நவநீதன் கிருஷ்ணன்
நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண் இரண்டில் பணிபுரியும் தலைமை காவலர் முருகவேல், முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் 30.05.2025 அன்று சித்தணி அருகே வாகன தணிக்கையில் பதிவெண் இல்லாத லாரியை பறிமுதல் செய்ததற்காகவும் காவல் ஆளிநர்களை 31-05-2025 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.