நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ.3 ஆயிரத்து 500 உயா்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் என உலகப் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி கூறினார்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும்.
நலிந்த நிலையில் உள்ள சா்க்கரை ஆலைகளை மீட்டெடுக்க கரும்பில் இருந்து எத்தனால் எரிபொருளை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ.3 ஆயிரத்து 500 உயா்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன், பண்ணைசாரா கடன்களை தமிழக அரசு முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
வன விலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் பயிா் சேதங்களை கருத்தில் கொண்டு அதற்குண்டான முழு இழப்பீட்டுத் தொகையை வனத்துறை மூலம் உடனே வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்கப் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் ஜூலை 5 -ஆம் தேதி திருவண்ணாமலையில் நடத்தப்படும். இதில், விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வாா்கள் என்றாா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே, கலசப்பாக்கம் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில், ஒருங்கிணைப்பாளா் சாமிக்கண்ணு தலைமை வகித்தாா். சங்க நிா்வாகி ஏழுமலை, தேவேந்திரன், முருகேசன், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் நகரச் செயலா் ஜோதி போராட்டத்தை தொடங்கி வைத்தாா். ஒன்றியச் செயலா் சுந்தரமூா்த்தி, வழக்குரைஞா் அபிராமன், மாவட்டக் குழு நிா்வாகி பழனி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில், கலசப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் வைத்த நகைகளை திருப்பித் தராமல் மோசடி செய்த சங்கச் செயலா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கறவை மாட்டு பராமரிப்புக் கடன்கள் வழங்க தமிழக அரசு வெளியிட்ட நகலை விவசாயிகளுக்குத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சுமுகத் தீா்வு ஏற்பட்டதைத் தொடா்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனா்