Close
ஜூன் 6, 2025 2:37 மணி

காஞ்சிபுரம் அருகே ரயில்வே மேம்பாலத்தில் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து: பராமரிப்பின்மையே விபத்துக்கு கரணம் என குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்ற போது அரசு பேருந்தின் ஆக்ஸில் கட் ஆகி நிலை தடுமாறி சுவற்றில் மோதி விபத்தில் 8 பேர் காயம்

பேருந்து பராமரிப்பின்மை மற்றும் ஓட்டுநரின் செல்ஃபோன் பேசிய ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என பயணி குற்றச்சாட்டு

திருவள்ளூர் பணிமணியை சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்து காஞ்சிபுரத்திலிருந்து பூந்தமல்லிக்கு இன்று மதியம் 12 மணிக்கு அருகில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுநர் கார்த்திகேயன்(51) மற்றும் நடத்துனர் வினோத் (29) ஆகியோர் பணிபுரிந்த நிலையில் 40 பயணிகளுடன் புறப்பட்டது.

பேருந்து காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலைய மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென சத்தம் கேட்ட நிலையில் பேருந்து முன் பக்க ஆக்சில் உடைந்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியது.

இதில் பேருந்தில் பயணித்த எட்டு பேர் சிறு காயங்கள் தசை பிடிப்பு உள்ளிட்ட நிலைகளில் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடத்துநரின் கால் மற்றும் மற்றொரு போக்குவரத்துக் கழக ஊழியரின் முதுகு நடு எலும்பு உள்ளிட்டவை பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது.

பேருந்து விபத்து குறித்து காயம் அடைந்த பெண் பயணியிடம் கேட்டபோது, பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் கேட்டதாகவும் அதனால் பேருந்து நிலை தடுமாறியதும் விபத்து காரணம் எனவும், மேலும் ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் செலுத்தியதாக அவர் தெரிவித்தது அதிர்ச்சியை அளித்தும், இதுபோன்று ஓட்டுநர்கள் இச்செயலை மேற்கொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை பார்க்க வந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விபத்து குறித்து கேட்ட போது எதுவும் கூற இயலாது என தெரிவித்து விட்டனர்.

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது பழைய பேருந்துகளே செயல்பட்டு வருவது என்பது, போக்குவரத்து காவல்துறையின் விதிகளின்படி பேருந்து ஒலிமுகமது பேட்டை வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை அடைய வேண்டும் என்பது விதி, ஆனால் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் இதை கடைபிடிப்பது இல்லை என்பது இந்த விபத்துக்கு ஒரு காரணம் எனவும் தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top