Close
ஜூன் 6, 2025 5:14 மணி

உசிலம்பட்டி கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

உசிலம்பட்டியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டத்திற்காக சென்னை பாபா அணு ஆராய்ச்சி மூத்த விஞ்ஞானி தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

உசிலம்பட்டியின் மையப்பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது உசிலம்பட்டி கண்மாய்.

இந்த கண்மாயில் அவ்வப்போது குப்பைகள், கோழி கழிவுகளை கொட்டுவதாலும், நகராட்சியின் 7 வார்டு கழிவு நீர் கலக்கப்படுவதாலும் மாசடைந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழலுக்கு மாறி வருகிறது.

ஒரு சில சமூக அமைப்புகள் அவ்வப்போது இந்த கண்மாயை தூர்வாரி சுத்தப்படுத்தினாலும், அரசு நிதி ஒதுக்கி கண்மாயை நவீன படுத்தி, நடைபாதை மற்றும் பூங்கா அமைத்து பாதுகாக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் , மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில் சென்னை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

எந்த எந்த பகுதியில் சாக்கடை கழிவு நீர் கலக்கப்படுகிறது, குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறியதாவது:

இந்த கண்மாய் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை இல்லாத நிலை நீடிகிறது. கண்மாயை நவீன படுத்தி பூங்கா வாக மாற்றினால் பெரும் பயனாக இருக்கும் என்பதை ஆய்விற்கு பின் தெரிந்து கொண்டேன், இந்த கண்மாய் குறித்த ஆய்வு அறிக்கையை அரசிடம் சமர்பித்த பின் போதிய நிதி ஒதுக்கி இந்த கண்மாயை நவீனபடுத்தி, நடைபாதை, பூங்கா அமைத்து பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top