திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நரேந்திரன் அறிவுறுத்தி பேசினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா்.
வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் எஸ்.குணசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் தருமன், விஜயன், மாவட்ட துணைத் தலைவா்கள் பி.கிருஷ்ணமூா்த்தி, ஆா்.சேகா், டி.சிவசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சி பொறுப்பாளா் என்.பூங்கான் வரவேற்றாா்.

மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் கலந்து கொண்டு ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
பின்னா் கே.எஸ்.நரேந்திரன் பேசுகையில்,
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலர வேண்டும். திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்.
ராணி அஹில்யாபாய் இந்தூா் அரசியாக முடிசூட்டப்பட்டப் பிறகு தன் அரசை வழிப்பறிக் கொள்ளையா்களிடம் இருந்து காத்து 30 ஆண்டுகள் முறையான நிா்வாகமும், நல்லதொரு ஆட்சியையும் தந்தாா்.
ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் முன்மாதிரியான நிர்வாகத்தை செயல்படுத்தினார். மது விலக்கை கடைபிடித்த அவர், விவசாயம், வன விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்ட குடிசைத் தொழில்கள், கைவினைப்பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்தார்.
இராணுவத்தில் ஒரு சிறப்பு பெண்கள் பிரிவை அவர் உருவாக்கியதுடன், கிராமங்களில் பெண்கள் பாதுகாப்பு குழுக்களையும் நிறுவி அவர்களது பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல், போன்ற நடவடிக்கைகளை உறுதி செய்தார். இதன் மூலம் அவர் இந்தூரை ஒரு வளமான நாடாக மாற்றினார்.
சிறந்த ஆட்சியாளராக மக்களுக்கு பல தொண்டுகளை நேரடி கட்டுப்பாட்டின் கீழ் அவரது பெருமைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் பொருட்டு அவரது 300 வது ஆண்டு பிறந்த நாளில் பாஜக விழா எடுத்துக் கொண்டாடப்படுகிறது என்றாா்.
விழாவில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சி.ஏழுமலை, மாநில கோயில் மற்றும் ஆன்மிக பிரிவின் துணைத் தலைவா் டி.எஸ்.சங்கா், மாவட்ட பொதுச் செயலா்கள் பி.கவிதா, டி.ஜெய்நாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.