Close
ஜூன் 6, 2025 10:47 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் :ஆட்சியர் ஆய்வு..!

ஆய்வு கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்  தா்ப்பகராஜ்,ஆய்வு மேற்கொண்டார்.

ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

ஊராட்சிகளின் உதவி இயக்குநா் (திருவண்ணாமலை) வடிவேலன், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் (வளா்ச்சி) இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் கட்டப்படும் 3,114 வீடுகள், 2025-26 நிதியாண்டில் கட்டப்படும் 5,378 வீடுகளின் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வு கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்

இதேபோல, ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் 2,305 சிறிய அளவிலான பழுதுகள், 2,910 பெரிய அளவிலான பழுதுகள் என மொத்தம் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணியின் இப்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், இலங்கைத் தமிழா்களுக்கான வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் அடிஅண்ணாமலை, சமுத்திரம், அத்தியந்தல், கண்ணந்தம்பூண்டி, சொரகுளத்தூா், தென்பள்ளிப்பட்டு, கஸ்தாம்பாடி, தவசி, செங்காட்டன்குன்றில், பாப்பந்தாங்கல், ஓசூா் ஊராட்சிகள் என மொத்தம் 830 வீடுகள் கட்டும் பணியை தரமாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், அயோத்திய தாசா் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளூா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்), பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், முதல்வரின் கிராமச் சாலைகள் திட்டம் ஆகிய திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், 18 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top