Close
ஜூன் 7, 2025 9:40 மணி

உலக சுற்றுச்சூழல் தினம்: மர கன்றுகளை நட்ட ஆட்சியர்

மர கன்றுகளை நட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சி துர்கை நம்மியந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், உடன் பசுமை படைக்குழு மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஒரு நாள் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, ஆசிரியர் பெருமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார்.

மேலும், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பாக பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு காலையில் பயிற்சி வகுப்புகளும், மாலையில் தோட்டம் அமைத்தல், கழிவு மேலாண்மை, வாழ்வியல் வழிமுறைகள் குறித்த களப்பயிற்சிகளும் அளிக்கப்படும் .

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் , மாவட்ட பசுமை தோழர் செல்வி. சரண்யா குமாரி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர் .

அரசு அலுவலகங்களில் பயன்பாடற்ற பொருட்களை அகற்றும் பணி

தமிழக அரசின் சிறப்பு திட்டச் செயலாக்கத்தில் செயல்படுத் தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் 05.06.2025 அன்று துறை மூலம் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நெகிழி கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டினை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற கருப்பொருளுடன் கூடிய பிரச்சார இயக்கத்தை 22.05.2025 முதல் 05.06.2025 வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் .

மேலும் , திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற,கிடப்பில் வைத்துள்ள, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள காகிதங்கள், உறைகள் அட்டைகள், நெகிழிகள், இரும்பு பொருட்கள், மின்னனு சாதனங்கள், கட்டுமான கழிவுகள், பயன்படுத்த இயலாத சுகாதாரம் தொடர்புடைய பொருட்கள் தேவையற்ற,உடைந்த, பயன்படுத்த இயலாத மரச்சாமன்கள் உள்ளிட்ட கழிவுகளை அரசின் வழிகாட்டுதல்களின்படி தொடர்புடைய அலுவலகங்களில் தூய்மை நடை மேற்கொண்டு சேகரிக்கப்பட்ட கழிவுகளை தரம் பிரித்து பழைய பொருட்கள் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  இந்நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top