திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆணைக்கிணங்க உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவண்ணாமலை , கீழ்பென்னாத்தூர் செங்கம், கலசபாக்கம் ஆகிய தொகுதிகளில் 1200 பூத்களில் ஒவ்வொரு பூத்திற்கும் 1000 மரக்கன்றுகள் என ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட தலைவர் கே.ரமேஷ் மரக்கன்றுகள் நட்டு தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள 1200 பூத்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியில் பாஜக நிர்வாகிகள் ஈடுபட்டதோடு தூய்மைப்பணியிலும் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், பட்டியல் அணியின் முன்னாள் மாவட்டத் தலைவா் முருகேசன், மண்டல பொதுச் செயலா் பன்னீா்செல்வம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய துணைத் தலைவா் ஏழுமலை, ஜமுனாமரத்தூா் முன்னாள் ஒன்றியத் தலைவா் எல்.ராஜகோபால், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் ஆா்.ஆறுமுகம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பொதுச் செயலா் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பாஜக சார்பில் முதியோர்களுக்கு அன்னதானம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையின் 41-ஆவது பிறந்த நாள் வாழைப்பந்தல் சாலையில் உள்ள போதிமரம் முதியோா் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும், 50-க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் சரவணன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினாா். நகர பொதுச் செயலா் ராஜேஷ் தலைமை வகித்தாா்.
விண்ணமங்கலம் பாரத்ராஜ், கிழக்கு மண்டல நிா்வாகி சரவணன், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, சேவூா் ராஜேஷ், தெற்கு மண்டல நிா்வாகி கேசவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.