விழுப்புரம் நகராட்சி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் தோண்டிய’ பள்ளத்தை தான் ஏனோ தானோ என மூடிட்டோம் ஆனா மூட மாட்டேன் என்கிறீர்கள். ஆனால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நெடுஞ்சாலையில் வெட்டிய பாதாள சாக்கடை பள்ளத்தையாவது விபத்து ஏற்படாதவாறு ஒழுங்காக மூடலாமே என அப்பகுதி பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நயரா பெட்ரோல் பங்க் எதிரே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பைப் லைன் செல்வதற்காக நகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டது,
அந்த பணி முடிந்ததும் அதனை சரிவர மூடாமல் விட்டதால், அந்த இடங்கள் மண் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென பெய்து வரும் மழை காரணமாக அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல், பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி காயம் அடைந்து வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழாமல் இருக்க பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஜல்லிகளை கொட்டி மரக்கன்றுகள் நட்டு உள்ளனர், மரங்கள் வளர்வதற்குள் உடனடியாக பள்ளத்தை மூடி விபத்து ஏற்படாமல் தடுக்க நகராட்சி நிர்வாகமோ அல்லது நெடுஞ்சாலை நிர்வாகமோ அதனை சரி செய்து விபத்து ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.