அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, குறவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன், பகவதி அம்மன், கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாக வாசகம், கணபதி ஹோமம், அதனை தொடர்ந்து மகா பூர்ணகுதி தீபாராதனை நடைபெற்றது. மூன்று கால யாகபூஜையிடன் கடன் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து கும்ப கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்தாலம்மன், பகவதி அம்மன், கலுவடியான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குறவன்குளம், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.