விவசாய மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவரை பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மாநில நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு ஆகிய இரு துறைகள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்தது.
இதில் தமிழ்நாடு மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் , தேசிய கூட்டமைப்பு சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு கடந்த 90 நாட்களுக்கு மேலாகி பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இது குறித்து விவசாயி சங்க கூட்டம் , வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என பல வகைகளில் விவசாயிகள் மனுக்கள் போராட்டங்கள் நடத்தினர்.
இந்நிலையில் தற்போது வரை பணம் வழங்கவில்லை என்பதால் பள்ளி கல்லூரி கட்டணங்கள், குடும்ப விசேஷங்களுக்கு பணம் இல்லாதது மற்றும் அடுத்த பருவத்திற்கான பயிர் செய்வது என அனைத்தும் பிரச்சனைகளாக உருவாகியது.
இது குறித்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து விவசாயிகள் மனு அளித்தபோது அடுத்த வாரத்திற்குள் சரி செய்து விடுவார்கள் என தெரிவித்தனர்.
அதில் அதிருப்தி அடைந்த விவசாயிகள் நேரடியாக நுகர்வோர் வாணிப மண்டல அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அலுவலர்கள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு திங்கட்கிழமைக்குள் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் பணம் வரவு வைக்கப்படாதால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் திடீர் போராட்டத்தில் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உடனடியாக சார் ஆட்சியர், காவல்துறையினர் என பல தரப்பினரும் ஒருங்கிணைந்து விவசாயிகளிடம் நேரடியாக பேச அழைப்பு விடுத்து அழைத்து சென்றனர்.
ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் சமாதானம் செய்வது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் இன்று கூட பண வழங்கப்படாத நிலை ஏற்படும் எனவும் விவசாயிகள் ஆவேசமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதனால் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது