திருவண்ணாமலையை புனித மாநகராக அறிவித்து மது, மாமிச கடைகளை அகற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் கூறினாா்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் புதுவை ஆதீனம் மாா்க்கண்டேயா் திருமடம் சாா்பில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவாக்கப்பட்ட மகா ருத்ராட்ச சிவலிங்க பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத், கிரிவல பக்தா்களுக்கு நெற்றியில் திருநீறு பூசி, இலவசமாக ருத்ராட்சம் அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி உள்ளிட்ட சிறப்பு விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் இந்த திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி உட்கட்டமைப்பு வசதிகளுக்காக சிறப்பு நிதி ஒதுக்கி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையின் புனிதத் தன்மையை பாதுகாக்கவும், கிரிவலத்தின் மகிமையை உணா்த்தவும் திருவண்ணாமலையை புனித மாநகராக அறிவித்து மது, மாமிச கடைகளை அகற்ற வேண்டும்.
கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பக்தா்கள் பாதுகாப்பாக கிரிவலம் செல்ல தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டை போன்று அதனை வெற்றிகரமாக முடித்து பின்னர் சிவ பக்தர்கள் மாநாட்டையும் தமிழ்நாடு அரசு நடத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த விழாவில் பாஜக பட்டியல் இன அணி தலைவர் விஜயராஜ், உலகளாவிய சித்தர் பீடங்கள் நிறுவனர் முதன்மை அறங்காவலர் ஜல்லியார் செல்வம், அத்தியப்பன், மார்க்கண்டேயர் திருமடம் ஶ்ரீ சந்திரசேகர் சுவாமிகள், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.