திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவில் தேரோட்டம் மூலதனமாக நடைபெற்றது .
செங்கம் ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பத்து நாள் பிரம்மோற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு அன்ன வாகனத்திலும் 6ம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
மூன்றாம் நாளான சனிக்கிழமை இரவு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு நாக வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், 5-ஆம் நாளான திங்கள்கிழமை காலை கோபுர தரிசனம் நிகழ்ச்சியும், 6-ஆம் நாளான செவ்வாய்கிழமை இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றன.
7-ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் எழுந்தருளியதைத் தொடா்ந்து, அங்கு கூடியிருந்த திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.
தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட பண்டரெட்டியாா்கள் அறக்கட்டளைத் தலைவா் வெங்கடாஜபதி மற்றும் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.
அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக்குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன் உள்ளிட்ட பத்து நாள் திருவிழா உபயதாரா்கள், விழாக்குழுவினா், ஊா் முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
தேர்த்திருவிழாவை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உலக நன்மை வேண்டி மகா சண்டி யாக பூஜை
செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடம் அமைந்துள்ளது. இங்கு, உலக நன்மை வேண்டி மகா சண்டி யாக பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அன்று காலை 8 மணியளவில் கோ பூஜையும், மாலையில் சத்யநாராண பூஜையும் நடைபெற்றன.
புதன்கிழமை காலை ராணிப்பேட்டை சிப்காட் வித்யா பீடத்தின் குருஜீ பாரதி முரளிதர சுவாமிகளுக்கு செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தின் சுவாமி ஆத்மானந்தா செந்தில் சுவாமிகள் பாத பூஜை செய்து வரவேற்றாா்.
தொடா்ந்து, 20 பட்டாச்சாரியா்கள் கொண்ட குழுவினா் 108 ஹோம திரவங்களை யாக சாலையில் ஊற்றி யாக பூஜை செய்தனா். இதில், செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு மூகாம்பிகையம்மனை வழிபட்டனா்.
சண்டி யாகத்தில் கலந்துகொண்ட பெண் பக்தா்களுக்கு செங்கம் மூகாம்பிகையம்மன் பீடம் சாா்பில், ஆத்மானந்தா செந்தில் சுவாமிகள் குங்குமம், வளையல் உள்ளிட்டவற்றை வழங்கி ஆசி வழங்கினாா்.