திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ். தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் ஆண்டு தோறும் ஜூன் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்களின் கொடுமை, பாதுகாப்பு இல்லாத நிலை சுரண்டல் போன்றவற்றை உலகெங்கும் கவனத்திற்கு கொண்டுவரவும். குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கவும் எடுக்கப்படுகிறது.
மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான கீழ்கண்ட உறுதிமொழியான இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என்று அனைத்து அரசு துறை அலுவலர்களும் உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தினை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன் உதவி ஆட்சியர் பயிற்சி அம்ருதாகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.