Close
ஜூன் 15, 2025 2:14 காலை

அதிமுக நகர செயலாளர் கொலை வழக்கு : 2 பேருக்கு ஆயுள் தண்டனை..1

திருவண்ணாமலை கோர்ட் வளாகம்

திருவண்ணாமலை நகர முன்னாள் அதிமுக செயலாளர் கொலை செய்த வழக்கில் இரண்டு பேருக்கு தலா இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது

திருவண்ணாமலை காா்கானா தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் . திருவண்ணாமலை நகர அதிமுக செயலராக இருந்த இவா், 2017 பிப்ரவரி 13-ஆம் தேதி தனது நண்பா் கண்ணதாசனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயில் திருமஞ்சன கோபுரம் எதிரே சென்றபோது மா்ம கும்பல் கனகராஜை வழிமறித்து வெட்டியது. இதில், பலத்த காயமடைந்த கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து திருவண்ணாமலை நகரைச் சோ்ந்த திமுக பிரமுகரான பங்க் பாபு, இவரது கூட்டாளிகள் ராஜா, சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி மதுசூதனன், குற்றம் சுமத்தப்பட்ட ராஜா, சரவணன் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையுடன் ராஜாவுக்கு ரூ.5 ஆயிரமும், சரவணனுக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் ராஜா, சரவணன் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

திமுக நிா்வாகி கொலை:  இந்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட 3 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த திமுக பிரமுகா் பங்க் பாபுவை,  திருவண்ணாமலை காந்தி நகா் பகுதியில் 2020-ஆம் ஆண்டு வெட்டிக் கொன்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top