காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி அருகே தனியார் பள்ளி பேருந்து தொழிற்சாலை ஊழியர்கள் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 சிறுவர்கள் 21 தொழிலாளர்கள் என 36 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி படுநெல்லி அருகே ராமகிருஷ்ணா வித்யாலயா எனும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் சுற்றுப்புற கிராமம் மாணவர்களுக்காக பள்ளி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிவு பெற்றபின் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு புரிசை சாலை நோக்கி பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது.
சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை பேருந்து அதன் பெண் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் 15 பள்ளி மாணவ மாணவியர்களும் 16 தொழிற்சாலை ஊழியர்களும் காயம் அடைந்து 108 அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் என அனைவருக்கும் முகம் மற்றும் கால்களில் காயமடைந்து அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அனைவருக்கும் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
விபத்து குறித்து அறிந்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளை விரைவாக எடுத்து அவர்கள் உடல் நிலை விரைவில் குணமடையும் வகையில் சிகிச்சை அளிக்க மருத்துவருக்கு அறிவுறுத்தினார்.
இந்த விபத்தால் விபத்து பகுதி மற்றும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது