திருவண்ணாமலையில் புதுமைப்பெண் தமிழ் புதல்வன் திட்டங்களில் திருநங்கைகள் விண்ணப்பிக்க பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருநங்கைகளின் நல்வாழ்விற்கென நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு புதுமையான திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களின் சமூகபொருளார மேம்பாட்டினை உறுதி செய்து வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் உயர்கல்விகற்பது இன்றியமையாததாகும். திருநங்கைகள் பாலின மாற்றித்தினால் குடும்பத்தை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் அவர்களும் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வாதாரத்தினை நடத்த வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பலர் கல்வியினை இடைநிற்றல் செய்யநேர்கிறது .
திருநங்கைகள் கல்வி உட்பட அனைத்து முயற்சிகளிலும் பாகுபாடு மற்றும் பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர் . அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இத்தடைகளைதாண்டி கல்வி பயில முன் வருகின்றனர். அவ்வாறு முன் வரும் திருநங்கைகளின் கல்வி கனவினை நிறைவேற்றுவதற்கான மற்றவர்களைப் போன்றே சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்யும் பொறுப்பினை உணர்ந்து அவர்கள் கல்வி கற்கும் சூழலுக்கு தேவையான மாற்றங்களை செய்தல் அவசியமாகிறது என்பதால் சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் மற்றும் தமிழப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவி தொகை வழங்கும் திட்டம் தற்பொது திருநங்கைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தழிழ்நாடு அரசால் உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக்கட்டணம் , விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்று அறிவிப்பு செய்துள்ளதைத் தொடர்ந்து,
திருநங்கைகளின் உயர்கல்வியை உறுதிப்படுத்தும் விதமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் திருநங்கை, திருநம்பிமற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை முழுதுமாக தளர்வு செய்து தமிழ்நாடு திருநங்கைகள் தாங்கள் பயிலும் கல்லூரிகளில் சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.