Close
ஜூன் 17, 2025 12:46 மணி

குருவிமலை நியாய விலை கடை முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

முறையாக நியாய விலைக்கடை திறந்து பொது மக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் எனவும், இணையதள சேவை குறைபாட்டை நீக்கி கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி குருவிமலை பொதுமக்கள் நியாய விலை கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை மூலம் பொது மக்களுக்கு அரிசி கோதுமை சர்க்கரை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.

தற்போது நியாய விலை கடைகளில் நடைபெறும் முறைகேட்டுகளை களைய கை ரேகை பதிவு கட்டாயம் என்பதும் ஒவ்வொரு பொருளுக்கும் சரியான எடை கொடுக்கும் பொழுது மட்டுமே இந்த நடைமுறை செயலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதள குறைபாடு மற்றும் கால தாமதங்களால் பொருட்கள் வழங்குவதில் பெருத்த சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தில் 750 குடும்ப அட்டைதாரர்களுக்கு வாரத்திற்கு மூன்று நாள் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இங்கு பணிபுரிந்த ஊழியர் உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு மாதங்களாக விடுமுறையில் உள்ளார்.

இதற்காக மாற்று பணிக்கு அருகில் இருந்த கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில் பொருட்களை கடந்த 15 தினங்களில் ஒரு நாள் மட்டுமே கடை திறந்து வழங்கி உள்ளார்.

இதனால் ஏழை எளிய அப்பகுதி மக்கள் எவரும் பொருட்கள் வாங்க முடியாத நிலை கண்டித்து இன்று கடை உண்டு 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முறையாக கடை திறந்து பொருட்கள் வழங்க வேண்டும் எனவும், பொருட்களை வழங்க இயலாத காரணமாக உள்ள இணையதள சேவையை சரி செய்து தர வேண்டும் எனவும், மூன்று கடைகளுக்கு ஊழியம் செய்யும் ஊழியரை ஒரே கடைக்கு நியமனம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top