நாமக்கல் :
நாமக்கல் குறைதீர் கூட்டத்தில், 33 பயனாளிகளுக்கு, ரூ. 14.46 லட்சம், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 564 மனுக்கள் வரப்பெற்றன.
அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கியலெக்டர் , மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தாட்கோ சார்பில் 5 பேருக்கு, ரூ. 6,000 மதிப்பில் கண்கண்ணாடி மற்றும் பட்டப்படிப்பு உதவித்தொகை, 2 பேருக்கு ரூ. 14.40 லட்சம் மதிப்பில், புதிய தொழில் மற்றும் வாகனத்திற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி, கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும், 10 பேருக்கு நல வாரிய அடையாள அட்டை, 16 பேருக்கு புதிய சீர்மரபினர் அடையாள அட்டை, என 33 பேருக்கு, ரூ. 14.46 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், தனி டி.ஆர்.ஓ., சரவணன், ஆர்.டி.ஓ. சுகந்தி, தனித்துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.